பிரம்மாண்டமாக நடைபெற்ற பெயர் சூட்டு விழா., பாண்டாஸ் ஹேப்பி அண்ணாச்சி..!!
Naming ceremony for panda bears
புதிதாக பிறந்த பாண்டா கரடிக்குன் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.
ஜப்பானில் பாண்டாகரடிகளை மதிப்பு மிக்கதாக கருதுவர். இந்நிலையில், அங்குள்ள பூங்காவில் இரு பாண்டா குட்டிகள் கடந்த ஜூன் மாதம் பிறந்தது. இந்த குட்டிகளுக்கு பொருத்தமான பெயரை தேர்ந்தேடுக்க தர சொல்லி மக்களிடம் அந்த பூங்கா நிர்வாகம் கேட்டிருந்தது.
இதனை அடுத்து சுமார், 1,90,000 கடிதங்கள் வந்திருந்தன. இந்த கடிதங்களை பரிசீலித்த பூங்கா நிர்வாகம் பாண்டாக்ரடிகளின் பெயர் சூட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தியது.
இந்த விழாவில் டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கெ கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆண் பாண்டாவுக்கு சியாயோ சியாயோ எனவும் பெண் பாண்டா குட்டிக்கு லெய் லெய் எனவும் பெயர் சூட்டப்பட்டது.
பாண்டா கரடிகளின் பெயர்களுக்கு எதிர்காலத்துக்கான வெளிச்சம் என்று பொருள் எனவே இவைகளின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும் என பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாண்டா கரடிகள் ஜனவரியில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
English Summary
Naming ceremony for panda bears