பெரு நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் மோதல் 14 பேர் பலி
Miners clash in Peru, 14 killed
பெரு நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் அரேக்விபா ஏன்ற இடத்தில் சிறிய அளவிலான தங்க சுரங்க தொழிலாளர்கள் இடையே இரு குழுக்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது.

அதன்பின்னர் இந்த மோதல் துப்பாக்கி சண்டையாக மாறி ஒருவரையொருவர் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
இந்த சண்டை முடிவில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் சிலர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
English Summary
Miners clash in Peru, 14 killed