பிளைட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..?! விமானத்தில் தகறாரு செய்த நபருக்கு ஏற்பட்ட நிலை.!
men arrested who fight with flight staffs
கடந்த வெள்ளிக்கிழமை ஏர் பிரான்ஸ் விமானம், கிழக்கு ஆப்ரிக்காவின் கானா பகுதியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது, பல்கேரியா மீது விமானம் பறந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு இந்தியப் பயணி அங்கிருக்கும் சோபியா விமான நிலையத்தில் மிக அவசரமாக விமானத்தை இறக்கச் சொல்லி விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால, ஏற்பட்ட குழப்பத்தால் வேறு வழியில்லாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இத்தகைய நிலையில், விமானம் தரையிறங்கிய பின்னர், சூரரை போற்று சூர்யா எனும் நினைப்பில் தகராறு செய்த பயணியை விமானிகள் விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து, சுமார் 72 மணி நேரம் அந்த பயணி காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து பல்கேரிய அரசு, இந்திய தூதரகத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்தது.
அந்த நபரின் மூர்க்கத்தனமான இந்த செயலால்,அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
men arrested who fight with flight staffs