சரணடையவில்லை என்றல் சுட்டு கொள்ளுங்கள்., எரிபொருட்களின் விலை உயர்வால் பற்றி எரியும் கஜகஸ்தான்.! - Seithipunal
Seithipunal


கஜகஸ்தான் நாட்டில் வாகன எரிபொருட்களின் விலையை இரு மடங்காக அந்நாட்டு அரசு உயர்த்தவே, ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் இந்த போராட்டம் , புரட்சிகரமான ஒரு போராட்டமாக மாறி, தற்போது வன்முறையாகவும் மாறியது. இதனால் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு பதவியும் விலகியது.

இருந்தபோதிலும் போராட்டக்காரர்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் பலரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வன்முறை கலவரத்தின்போது சுமார் இருபத்தி ஆறு போராட்டக்காரர்களும், பாதுகாப்பு படையை சேர்ந்த 18 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 718 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 30 ஆண்டுகளாக போராட்டத்தை சந்திக்காத கஜகஸ்தான் நாட்டில் இப்படி ஒரு போராட்டம் நடைபெறுவதற்கு, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல் தான் காரணம் என்று, நாடு முழுவதும் அவசர நிலையை அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் பிரகடனம் செய்துள்ளார்.

மேலும் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்த அதிபர் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவும், சுட்டுக் கொலை செய்யவும் அனுமதி அளித்துள்ளார்.

"பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது கொடிய ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி உத்தரவிட்டுள்ளேன். சரண் அடையவில்லை என்றால் அவர்கள் கொல்லப்படுவார்கள்" என்றும் அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் பேட்டி அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kazakhstan protests Unrest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->