சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம் - கமலா ஹாரிஸ் பேச்சு..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இந்திய நேரப்படி நேற்று உரையாற்ற இருந்தார். ஆனால் தோல்வியை நோக்கி சென்றதால் உரையாற்றவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை உரையாற்றிய அவர் பேசியதாவது:- "ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம். நமது சுதந்திரத்திற்காக போராடுவது கடின உழைப்பை எடுக்கும்.

ஆனால் நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம். நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்புக்குரியது. சில சமயம் போராட்டத்தில் வெற்றி கிடைக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நாம் வெற்றிபெற மாட்டோம் என்று அர்த்தமல்ல. அதனால், ஒருபோதும் கைவிடாதீர்கள்.

இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும் பிரசாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன். அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும்.

இன்று முன்னதாக, நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடன் பேசினேன், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். டிரம்ப் மற்றும் அவரது குழுவின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்

தேர்தலில் போட்டியிட்டது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல. முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டு தான் செல்ல வேண்டும். நாம் போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதி வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக எரியும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kamala harrish speech about president election


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->