வேலையே இல்ல.. போரடிக்கிது.. முதலாளியின் மீது கம்ப்ளெயிண்ட் செய்த நபர்.!
Irish train Employee complaint against Owner
நமது சக்திக்கு மீறிய உடல் உழைப்பை கொடுத்து குறைந்த சம்பளம் கொடுக்கும் முதலாளிகளை பார்த்து பலரும் வயிறு எரிந்து சாபம் விடுவதும் வழக்கு தொடுப்பதும் நடந்து வருகின்றது.
ஆனால், ஒரு நபர் தனக்கு வேலை இல்லாமல் சம்பளம் அதிகப்படியாக கொடுப்பதாக தனது முதலாளியின் மீது வழக்கு தொடர்ந்து உள்ள சம்பவம் பெரும் திருப்பமாக இருக்கிறது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை போர் அடிப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஐரிஷ் ரயில்வேயில் அவர் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது, மாதம் 8 லட்ச ரூபாய் சம்பளம். ஆனால், வாரத்தில் ஒரு நாள் கூட வேலை இல்லை என்ற காரணத்தால் அந்த நிறுவனத்தின் மீது சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Irish train Employee complaint against Owner