இரண்டு சிறுவர்கள் பலி.. அதிகரிக்கும் பதற்றம்..‌ பாகிஸ்தான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஸ்-உல்-அல்ட் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இரண்டு இடங்களை ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

குஹே சப்ஸ் பகுதியை குறிவைத்து அடுத்த பட தாக்குதலானது ஜெய்ஸ்‌ உல் அட்லியின் மிகப்பெரிய தலங்களில் ஒன்று என தெரிய வந்துள்ளது. 

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் விவரிக்கின்றன. ஈரானின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் "பாகிஸ்தான் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகள் மரணத்திற்கும், மூன்று சிறுமிகளை காம சிறுமிகளை காயப்படுத்தியதையும் பாகிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையின் மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran missile attack on Pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->