வெள்ளை மாளிகையை லாரியால் இடிக்க முயன்ற இந்திய வாலிபர் கைது.!!
indian man arrested for attack america white house
வெள்ளை மாளிகையை லாரியால் இடிக்க முயன்ற இந்திய வாலிபர் கைது.!!
அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டனில் கடந்த திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வாடகைக்கு லாரி ஒன்றை எடுத்துக்கொண்டு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தடுப்பு சுவரில் மோதியுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த இளைஞரை தடுக்க முயற்சி செய்தபோது, அவர் மீண்டும் தடுப்பு சுவரில் மோதியுள்ளார். பல முயற்சிகளுக்குப் பிறகு போலீசார் அந்த லாரியை மடக்கி இளைஞரை கைது செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 11-eyq4k.png)
அதன்பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா என்பது தெரியவந்தது. மேலும், புனித லூயிஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர் வாஷிங்டனில் இருந்து வாஷிங்டன் விமான நிலையத்துக்கு வந்து அங்கு வாடகைக்கு லாரி எடுத்து வெள்ளை மாளிகை சுவரில் மோதியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பிடிபட்ட சாய் வர்ஷித்திடம் நாஸி படை கொடி இருந்ததாகவும், நாஸி கொள்கைகள் மீது மிகுந்த ஈர்ப்பு உடையவராக இருந்த அவர் அந்த கொடியை இணையத்தில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் சாய் வர்ஷித் வசித்து வந்த வீட்டை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
English Summary
indian man arrested for attack america white house