லண்டன் சென்றுள்ள பிரதமர்: இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது..! - Seithipunal
Seithipunal


அரசு முறை பயணமாக நேற்று பிரதமர் மோடி லண்டன் சென்றுள்ளார். அங்கு பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் கையெழுத்து போட்டனர்.

கடந்த மே 06-ஆம் தேதி இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு இரு நாட்டு பிரதமர்களும் மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின் போது இது கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்த நிலையில், பிரிட்டன் சென்றுள்ள பிரதமருக்கு லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் போது இரு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 36 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முக்கிய சாதனை என்றும், இதன் மூலம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் என கெயிர் ஸ்டார்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் பிரிட்டன் 06-வது இடத்தில் உள்ளது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் உள்ளன. மேலும், அங்கு ஒரு லட்சம் பேர் பணியாற்றிவருகின்றனர். தற்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் 99 சதவீத பொருட்கள் பிரிட்டன் சந்தையை வரியின்றி அணுக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India and Britain have signed a free trade agreement


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->