மனைவியை கொன்று, சடலத்தை வைத்து கொடூரமாக கணவன் செய்த காரியம்.!
husband killed wife in mexico
மெக்சிகோ நகரைச் சேர்ந்த எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்ற 46 வயது நிறைந்த மனிதர் கடுமையான போதையில் இருந்துள்ளார். அப்பொழுது, அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு கடுமையான வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து தன்னுடைய மனைவியின் கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்து இருக்கின்றார்.
அதன்பின்னர், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை உரித்து உடல் உறுப்புகளை வெட்டி அங்கு இருந்த கால்வாயில் வீசி எறிந்து இருக்கின்றார். வீட்டில் கொலை செய்ததற்கான தடங்களை எல்லாம் மறைத்துவிட்டு பின்னர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு இதுகுறித்து போன் செய்து தெரிவித்திருக்கின்றார்.
இதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த அவருடைய முன்னாள் மனைவி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து அவருடைய வீட்டிற்கு வந்து இழந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.
பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
English Summary
husband killed wife in mexico