ஒற்றை வாழைப்பழத்திற்காக அடித்துக்கொண்டு நூற்றுகணக்கான குரங்குகள்!!
hungry monkeys fight for one banana
தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் ஒரே நேரத்தில் ஒரே ஒரு வாழப்பழத்திற்காக சாலையில் மொத்தமாக மோதிக் கொண்டுள்ளது.
மத்திய தாய்லாந்தில் இருக்கும் லோப்புரி என்னும் இடத்தின் புறநகர் பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வளம் வருகிறது. இந்தக் குரங்குகள் அந்த பகுதியில், தனித்தனியாக குழு அமைத்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், உணவுக்காக அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம். அந்த வகையில், லோப்புரி ஊருக்குள் வந்த குரங்குக் கூட்டத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் கிடைத்துள்ளது.
அந்த ஒற்றைப் பழத்தை யார் உண்பது என்பதில் போட்டி ஏற்பட்டு இறுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சாலையில் இறங்கி கடுமையாக மோதிக் கொண்டன. மொத்தக் குரங்குக் கூட்டமும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்து பாதிப்பானது. பின்னர் வாழைப்பழத்தை ஒருவர் மாறி ஒருவர் பறித்துக் கொண்டே குரங்குகள் நகரின் மறுபுறத்திற்குச் சென்றன. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
hungry monkeys fight for one banana