இலங்கையில் நடந்த தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாக்களித்த அதிபர் வேட்பாளர் தோல்வி.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் முடிவில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நள்ளிரவு முதலே வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 43,15,506 வாக்குகளுடன் சுமார் 50.46% சதவீத வாக்குகளை பெற்று இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக  முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 37,28,789 வாக்குகளுடன் சுமார் 43.6% சதவீத வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

இதையயடுத்து, சஜித் பிரேமதாச இலங்கை மக்களின் தீர்ப்பை ஏற்று தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் அறிவித்தார். அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையின் தற்போதைய புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம், தேர்தல் பரப்புரையின் போது எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுயிருந்தது.

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சஜித்க்கு அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gotabaya rajapaksa win in srilanka election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->