நடுவழியில் பற்றி எரிந்த ரெயில் பெட்டிகள் - 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தெற்காசிய நாடான வங்காளதேசத்தின் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரிலிருந்து தலைநகர் டாக்காவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலின் நான்கு பெட்டிகள் தீப்பிடித்தது.

அந்தப் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் கத்திக் கூச்சலிட்டனர். இதைக்கேட்டு ஓடிவந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். 
பின்னர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர். 

இருப்பினும், இந்தத் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், சிலரின் சதிச்செயலால் இந்தவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for train fire accident in bangaladesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->