அமெரிக்காவில் மருத்துவ விமானம் விபத்து - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நெவாடாவில் மருத்துவ விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு நோயாளி மற்றும் குடும்ப உறுப்பினர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நெவாடா மாகாணம் ஸ்டேஜ்கோச் நகரிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமான ஒன்று விமானி, செவிலியர், மருத்துவர், ஒரு நோயாளி மற்றும் ஒரு நோயாளியின் குடும்ப உறுப்பினர் என ஐந்து பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மாயமானது.

இதையடுத்து தேடுதல் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு, மாயமான விமானம் ஸ்டேட்கோச் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்து ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விமான விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Five Killed in Medical Plane Crash in America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->