பொருளாதாரத்தை சீர் செய்ய உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.! - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தை சீர் செய்ய உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

ரஷ்யா உக்ரைனுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் சேதம் அடைந்து, 1000 கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் உக்ரைனின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. 

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ரஷ்யா படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைனின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, உடனடி பண புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EU provides nine billion euro to ukraine


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->