இரண்டாம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவு?.. எதிர்பார்ப்பில் மக்கள்.!
England Second Corona Wave Lockdown Ended 2 December 2020
இங்கிலாந்து நாட்டில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர, அந்த நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை 4 வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்களின் உயிர் மிக முக்கியம் என்பதை எடுத்துக்கூறி பிரதமர் முழு ஊரடங்கை அறிவித்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் காரணத்தால், இந்த ஊரடங்கை முடிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
England Second Corona Wave Lockdown Ended 2 December 2020