அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.! தஜிகிஸ்தான் - சீனா எல்லையில் பதற்றம்.!  - Seithipunal
Seithipunal


தஜிகிஸ்தானும், சீனாவும் பலத்த நிலநடுக்கத்தின் காரணமாக குலுங்கியுள்ளன. European-Mediterranean Seismological Centre (EMSC) கொடுத்த தகவலின் படி 7.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது. 

தஜிகிஸ்தான் பகுதிகள் மற்றும் சீனா மற்றும் தஜிகிஸ்தான் இடையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சின்ஜியாங் மாகாணத்தில் வியாழக்கிழமை காலை சுமார் 8:37 மணிக்கு உணரப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்க அதிர்வுகளை
சீன நாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சைனா அருகாமையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தற்போது முதற்கட்ட முடிவுகள் கூறுகின்றன. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சின்ஜியாங் மாகாணத்தில், இதுவரை
உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவல்களும் இல்லை. மேலும், தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earth quake In Tajikistan and China Border In Feb 23


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->