வரலாற்றில் இன்று - உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் !
drought eradication day
உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்:
உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்தது.