கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய சிலி, பெரு.. உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் சோகம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் கோர தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் வீரியத்துக்கு மக்கள் பரிதாபமாக தங்களின் உயிர்களை இழந்து வருகின்றனர். உலகளவில் 214 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது. 

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட உலக நாடுகளே தடுப்பூசி கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 10,802,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 518,921 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5,938,954 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

அமெரிக்க நாட்டில் 2,779,953 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 676 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 130,798 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் 1,453,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 1,057 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 60,713 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியா நாட்டில் 654,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 216 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,536 ஆக உயர்ந்துள்ளது. பெரு நாட்டில் 288,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 183 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,860 ஆக உயர்ந்துள்ளது.

சிலி நாட்டில் 282,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 65 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,753 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா உலகளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. தற்போது பெரு மற்றும் சிலி நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உச்சமடைய துவங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona virus world update 2 July 2020


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->