இந்தியாவுடனான மோதல்: ராணுவத்திற்கு 18% கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ள பாகிஸ்தான்: பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!
Conflict with India Pakistan allocates 18 percent more funds for the military
பாகிஸ்தான் ராணுவத்திற்கு கூடுதலாக 18% நிதி ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி மற்றும் தடுமாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பல்வேறு ராணுவ பதிலடிகளை இந்தியா கொடுத்தது. அத்துடன், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியதோடு, அட்டாரி எல்லையை மூடியதுடன், தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் நெருக்கடிகளை தற்போது சந்தித்து வருகிறது.

தற்போது, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கூட்டணி அரசு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஆனால், இந்தாண்டுக்கான ராணுவ பட்ஜெட்டில் அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் ராணுவத்தை நவீனமயமாக்கல் மற்றும் சீனாவுடனான ஸ்டெல்த் ஜெட் மற்றும் தண்டர் விமானங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் 38% ஐ தாண்டிய பணவீக்கத்தின் மத்தியில், ராணுவத்திற்கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட் 17.5 டிரில்லியன் ரூபாயாக இருக்க, கடனுக்கு மட்டும் 9.7 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் ராணுவத்திற்கான ஒதுக்கீடு உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில், ராணுவ செலவினங்களுக்கான தொகையை 18% உயர்த்தி, 2.5 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் நிதியை ஒதுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மேம்படாமல், ராணுவத்திற்காக வீண் செலவு செய்யப்படுகிறது. இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தி, பாதுகாப்பு செலவினங்களை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Conflict with India Pakistan allocates 18 percent more funds for the military