ஏப்ரல் 8 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - இதுதான் காரணமா?
coming eight holiday to schools for solar eclipse
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை நிகழ உள்ளது. ஒவ்வொரு வருடமும் நிகழும் இந்த சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும். இந்த சூரிய கிரகணத்தை பார்க்க இருக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு இடமளிக்க அமெரிக்காவின் நயாகரா பகுதி தயாராக உள்ளது.
அதனால், நயாகரா பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 8 ஆம் தேதி சாலைகளில் போக்குவரத்தைத் தடுக்க சில வழிகள் மூடப்படுவதால் பார்வையாளர்கள் கூட்டத்திற்கும் நீண்ட வரிசைகளுக்கும் தயாராக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 8 ஆம் தேதி நீங்கள் பயணிக்கும்போது உள்ளூர் வழிகாட்டுதல்கள் மற்றும் சாலைப் பலகைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, கிரகணத்தைக் காண உங்கள் காரை நிறுத்தவோ, புகைப்படம் எடுக்கவோ அல்லது இறங்கவோ வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming eight holiday to schools for solar eclipse