நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்.!
Coal Mine Collapse Accident 5 Workers Died
பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தின் பெய்த கன மழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. இந்நிலையில் கன மழை காரணமாக திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
இது குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கனமழை காரணமாக அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Coal Mine Collapse Accident 5 Workers Died