பீகார் தேர்தல்: “நியாயமற்ற தேர்தல்…நான் அப்பவே சொன்னேன்! தோல்வி குறித்து ராகுல் காந்தி கருத்து! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இதை “ஆரம்பம் முதலே நியாயமற்ற முறையில் நடைபெற்ற தேர்தல்” என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார். மொத்தம் 243 தொகுதிகளில் என்டிஏ 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், ‘இந்தியா’ கூட்டணி 40 இடங்களைக் கூட தாண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எக்ஸ் பதிவில் ராகுல்,“மகாகத்பந்தனில் நம்பிக்கை வைத்து வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி. இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமானது. நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட தேர்தலால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,“இது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான போர். ‘இந்தியா’ கூட்டணி இந்த தோல்வியை மதிப்பாய்வு செய்து போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தும்,” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதே கருத்தைத் தொடர்ந்து,“அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும்,” என்றார்.
“தொண்டர்கள் மனம் தளர வேண்டாம்; உங்கள் உழைப்பே எங்கள் பலம்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 61 இடங்களில் வெறும் 6 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2020-இல் 70 தொகுதிகளில் 19 வெற்றியுடன் இருந்ததை ஒப்பிடும் போது இது கடுமையான பின்னடைவு. ஆர்.ஜே.டி.யும் 143 இடங்களில் போட்டியிட்டு 25 மட்டுமே வென்றுள்ளது; கடந்த முறை 75 இடங்களை கைப்பற்றியிருந்தது.பீகார் முடிவு இந்திய அரசியல் சூழலில் புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Election Unfair election I said it then Rahul Gandhi comments on the defeat


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->