அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!
Andaman and Nicobar Islands earthquake
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7:53 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் கடல் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் சிறிய அளவிலான நிலநடுக்கம் என்றாலும் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Andaman and Nicobar Islands earthquake