அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 7:53 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் கடல் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இந்த நிலநடுக்கம் சிறிய அளவிலான நிலநடுக்கம் என்றாலும் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Andaman and Nicobar Islands earthquake 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->