ஏர்பஸ் நிறுவனம்: இந்தியாவிலிருந்து 1,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டம்..!! - Seithipunal
Seithipunal


விமானத்துறையின் தேவையின் அதிகரிப்பு மற்றும் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக சர்வதேச விமான நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக அளவில் தேர்வு செய்யப்படவிருக்கும் 13,000 பொறியாளர்களில் 1,000 பொறியாளர்களை இந்தியாவிலிருந்து தேர்வு செய்ய ஏர்பஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அமெரிக்கா ஜெட் உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தலைவர் சலீல் குப்டே, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பொறியியல் மாணவர்கள் பட்டம் பெறும் நிலையில், குறைந்த ஊதியம் மற்றும் அதிக திறமை வாய்ந்த இந்திய பொறியாளர்களை பணியமர்த்த போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு மீண்டும் விமானபயணம் அதிகரித்து வருவதால், சர்வதேச விமானத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் இந்திய நிறுவனங்களின் உற்பத்தி திறன் முக்கியமாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Airbus plans to hire 1000 engineers from India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->