ஊரடங்கால் 1,52,000 சிறுமிகள் கர்ப்பம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் மாளவியில் கடந்த ஐந்து மாதமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் மாணவிகளில் 10 வயது முதல் 14 வயதிற்குள் இருக்கும் சிறுமிகள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 

இதனால் சிறுமிகள் மற்றும் மாணவிகள் அதிகளவு கர்ப்பமாகியுள்ளனர். அங்குள்ள ப்ளோம்பே நகரில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் தெரிவிக்கையில், இளம்பெண்களின் வாழ்க்கை மோசமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலின ரீதியிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான செயல்கள் அதிகரித்துள்ளது கவலைகள் அளிக்கிறது என்றும், மொத்தமாக 3700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலையில் தொடக்கத்தில் ஊரடங்கு நேரத்தில் சிறுமி கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், மூன்றே மாதத்தில் கென்யாவில் 1,52,000 சிறுமிகள் கர்ப்பம் ஆகியதாகவும், மாத சராசரியில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 1000 சிறுமிகளின் 82 பேர் கர்ப்பம் ஆவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Africa child girl got pregnancy


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->