7ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு.! 8 மாணவர்கள் உயிரிழந்த சோகம்.!
8 school student died as 7th class boy shooting in serbia
ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் பல்கிரெடி மாகாணத்தில் உள்ள விளாடிஸ்லாவ் ரிப்னிகர் ஆரம்பப் பள்ளியில் நேற்று வழக்கம்போல மாணவர்கள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக 7ம் வகுப்பு மாணவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 8 சக மாணவர்களும், ஒரு பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த மாணவனை கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய மாணவன் பல வாரங்களாக தாக்குதலைத் திட்டமிட்டு கொலை பட்டியல் வைத்திருந்ததாகவும், துப்பாக்கி சூட்டிற்காக தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவன் மனநல மருத்துவ மனைக்கு அனுப்பப்படுவார் என்றும், தற்போதைய செர்பிய சட்டத்தின்படி, அவர் 14 வயதிற்குட்பட்டவர் என்பதால் தண்டனைகள் வழங்கப்படாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
8 school student died as 7th class boy shooting in serbia