இத்தாலியில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு.! 8 பேர் பலி, 13 பேர் மாயம்.!
8 killed in landslide in Italy
தெற்கு இத்தாலியின் தீவான இஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நேற்று அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன.
இதையடுத்து நிலசரிவில் சிக்கி காணாமல் போன நபர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 13 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆறு மணி நேரத்தில் தீவில் 126 மிமீ மழை பெய்துள்ளது என்றும், இது 20 ஆண்டுகளில் இல்லாத அதிக மழை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
8 killed in landslide in Italy