உக்ரைன் படைகள் ராக்கெட் மூலம் தாக்குதல்.! 63 ரஷ்ய வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என ஐநா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே ரஷ்யா இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வரும் நிலையில், உக்ரைன் படைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஹிம்ரஸ் ராக்கெட் மூலம் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் ஹிம்ரஸ் ஏவுகணையில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்க்ஸ் மாகாணத்தின் மெகிவ்கா நகரில் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் காயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

63 Russian soldiers died in Ukraine rocket attack


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->