6 ஆயிரம் வடகொரிய வீரர்கள் பலி! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் தாக்குதலை  சமாளிக்க முடியாமல்    6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.


கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது  ரஷியா போர் தொடுத்ததுவருகிறது.2022-ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதால் ரஷியா போர் தொடுத்ததுவருகிறது.இந்த போரில்  உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவி வழங்குகின்றன. 

இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் படைகள் நுழைந்து எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றினர் . உக்ரைன் படைகள் தொடர்ந்து ஊடுருவியதால் நிலைமையை சமாளிக்க நட்பு நாடான வடகொரியாவின் உதவியை ரஷியா நாடியது.

இதனையடுத்து ரஷியாவுக்கு சுமார் 11 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியது,உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க குர்ஸ்க் பிராந்திய எல்லையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர்.ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை மற்றும் உக்ரைனின் தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியாமல்    6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

 ரஷியா மற்றும் வடகொரியா தரப்பில் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 thousand North Korean soldiers killed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->