இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் பலி.!
5 killed in Isreal army attack on Palestine
இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீன பகுதியில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு ஆசியா நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆயுத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேலின் மேற்கு பகுதியில் யூத குடியிருப்பில் தாக்குதல் நடத்த முயற்சி செய்த பயங்கரவாதிகள் தப்பியோடி பாலஸ்தீனத்தில் அகாபத் ஜபா் பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பொழுது நடைபெற்ற தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் யூத குடியிருப்பில் நடத்தபட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இஸ்ரேலின் இந்த தாக்குதல் குற்றச்செயல் எனவும், பாலஸ்தீன பகுதியில் அத்துமீறி நுழைவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
5 killed in Isreal army attack on Palestine