ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 28 காயம் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதிக வேகத்தில் சென்ற பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த பயங்கர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 28 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து வந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதன் ஓட்டுநரின் கவனக்குறைவலே விபத்து நிகழ்ந்ததாக மாகாண தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் மதியுல்லா ரோஹானி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 dead 28 injured in bus overturn accident in Afghanistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->