உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் இந்தியர் உட்பட 04 பேர் பலி; 12 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மீது இன்று உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"இன்று அதிகாலை மாஸ்கோவில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு, மருத்துவமனையில் காயமடைந்த தொழிலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கு தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த ட்ரோன் தாக்குதல்களை உறுதிப்படுத்தியதோடு, அவை முற்றிலும் நியாயமானவை என்றும் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 Dead Including an Indian in Ukrainian Drone Attack on Russia


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->