துணை ராணுவப் படை நடத்திய தாக்குதலில் 33 பேர் பலி!
33 people were killed in an attack carried out by the auxiliary military forces
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் பலியாகினர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரில் 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தின் தலைநகரான எல்-ஓபெய்டில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது RSF ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நகரம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு நிலைமையை மேலும் மோசமாகியுள்ளன.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, டார்பூரில் RSF ஆல் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான போர்ட் சூடானில், RSF தொடர்ந்து ஆறு நாட்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமாகின. இவற்றில் மின்சார கட்டமைப்பு மற்றும் சிவில் விமான நிலையம் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
33 people were killed in an attack carried out by the auxiliary military forces