கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை; 17 பேர் பலி; 1 லட்சம் பேர் அண்டை நகரங்களில் தஞ்சம்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்கா நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நாட்டில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. அவர்களை எதிர்த்து அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன் தொடர்ந்து, முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கு போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர். மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், அங்கு தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள 01 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் வன்முறையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 04 பேர் தற்போது உயிரிழந்தனர். இதனால் ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 people killed in violence in the East African country


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->