சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கிய பகுதிகள்.. உற்சாகத்தில் மக்கள்..!
yesterday rain in tamilnadu
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதேபோல் தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து மிதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
English Summary
yesterday rain in tamilnadu