தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தினாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரான சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களிலும் புழுக்கமான சூழல் நிலவுகிறது.

அதன்படி ஈரோட்டில் 103.28°F கரூர் பரமத்தி 102.2°F மதுரை விமான நிலையத்தில் 100.04°F சேலத்தில் 100.76°F கோவையில் 100.04°F திருச்சியில் 100.22°F என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 100°F தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கமாறு முடிந்தவரை காலை 11:00 மணி முன்பும் மாலை 3:00 மணிக்கு பிறகும் வெளியில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Weather temperature crossed 100 deg Fahrenheitin tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->