இடியுடன் கூடிய மழை.. நான்கு நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்- வானிலை ஆய்வு மையம்.!
weather report feb 25
வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 26 ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.