தென்மேற்கு பருவமழை... அடுத்தடுத்து வரப்போகும் 2 புயல்கள்.!! மக்களே உஷார்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்கிறது. ஆனால் தமிழகம் வடகிழக்கு பருவமழையால் மட்டுமே அதிக மழை பொழிவு பெறுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி பெய்தது.

இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறிகள் லட்சத்தீவுகள் பகுதியில் எதுவும் தென்படவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வரும் ஜூன் 4ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கேரளாவில் ஜூன் 4ஆம் தேதி தென்மேற்கு பருவமழை உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி முதல் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் ஜூன் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரபிக் கடலில் அடுத்தடுத்து இரு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two consecutive storms are likely to form in Arabian Sea


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->