தமிழகத்தை புரட்டிப் போடப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
sep 16 weather report in tamilnadu
ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலைவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திர கடலோர மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வலிமண்டல சூழ்ச்சியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் செப்டம்பர் 18ஆம் தேதி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
sep 16 weather report in tamilnadu