வங்கக்கடலில் 14-ல் ஒன்று, 19-ல் ஒன்று... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் தொடர்ந்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தற்போதைய வடகிழக்குப் பருவமழையை மேலும் வலுப்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கிய பிறகு முதல் தாழ்வுப்பகுதி பலவீனமடைந்தது. பின்னர் உருவான இரண்டாவது தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெருக காரணமாக இருந்தது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மழைச் செயல்பாடு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கமைய, நவம்பர் 14ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 19ஆம் தேதி அந்தமான கடல் பகுதியில் மேலும் ஒரு தாழ்வுப்பகுதி உருவாகும் சாத்தியமும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMD two successive low pressure areas Bay of Bengal


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->