குடையுடன் ரெடியா! 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு...!- வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம்,"இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில்,சென்னை, தேனி,திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விருதுநகர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், விழுப்புரம்,  தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Get ready with your umbrella Chance of rain in 15 districts till 7 pm Meteorological Department


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->