#BREAKING : கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.! வெளியான புயல் அறிவிப்பு.!
first stage cyclone warning
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.
காரைக்காலுக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதால் இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
first stage cyclone warning