3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதேபோல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட தகவலின்படி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மிதமான மழை தொடரும் என்றும், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai RMD report on Feb 21


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->