தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை! நாளை 6 மாவட்ட மக்களே உஷார்!
Chennai IMD TN Rain alert 24 07 2025
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை 5.30 மணியளவில் வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் ஒடிசா கடலோரத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளைமறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை பகுதிகளில் மழை தொடரும். வருகிற 27ஆம் தேதி, நீலகிரி மற்றும் கோவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 27ஆம் தேதி வரை 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
English Summary
Chennai IMD TN Rain alert 24 07 2025