வங்கக்கடலில் உருவான புயல் சின்னம்! முக்கிய தகவல் சொன்ன வானிலை ஆய்வு மையம்!
chennai imd weather update
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா கடற்கரை அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இன்று காலை நிலவரப்படி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. தற்போது அது மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், நாளை அதிகாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரைகளை கடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai imd weather update