குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க... 9 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன "வானிலை மையம்"...!
Chance of rain in next three hours in 9 districts of tamilnadu
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வருகின்ற 6ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 4ம் தேதி வரை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chance of rain in next three hours in 9 districts of tamilnadu