தமிழகத்தில் 12 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
12 districts red alert in tamilnadu
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இரவும், பகலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், 30ஆம் தேதிவரை காற்று சுழற்சி நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஆகையால் இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
12 districts red alert in tamilnadu