புதைத்த இடத்தில், குறைத்த நாய்.! வெகு நாட்களுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி.!
dog find out baby inside box
சீனாவைச் சேர்ந்த ஜியாவோ சிங்லு மற்றும் ஜாவ் ஷாங்க்டாங் இருவரும் லாலுக்கு அருகே இருக்கும் மலைப்பகுதியில் காலநிலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டே இருப்பதைக் கேட்டு அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அந்த நாய் ஒரு இடத்தில் நின்றவாறு குரைத்துக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக காலால் குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டும் காலால் பறித்து கொண்டே இருந்துள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர்கள் இருவரும் அந்த இடத்தில் குழி தோண்டிப் பார்த்தபோது அங்கே அட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் திறந்து பார்த்த பொழுது ஆண் குழந்தை ஒன்று மெத்தையில் மூடப்பட்டு இருந்துள்ளது.
இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தை ரத்தசோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என கூறியுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது குழந்தை பிறந்த மறுநாளே நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக நினைத்து பெற்றோர்கள் அதை புதைந்துள்ளது, தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dog find out baby inside box