மதுரை அருகே சோகம் - திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடமலை மகன் மதன்குமார். பத்தாம் வகுப்பு படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

அதற்கு அவர் இன்னும் உனக்கு வயது இருக்கு. சில காலம் போகட்டும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்து வந்த மதன்குமார் மதுபோதையில், தனது தந்தையிடம், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னால் செய்ய மாட்டாயா? என்று கூறிக் கொண்டே அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை வடமலை உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மதன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth sucide in near madurai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->